தேவையானவை:
கேரட் துருவல் - 50 கிராம்
காய்ச்சியப் பால் - 2 டம்ளர்
பேரீச்சம் பழம் - 50 கிராம்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - சிறிது
செய்முறை:
கேரட் துருவல் மற்றும் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழங்கள், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியிலிட்டு, அதனுடன் காய்ச்சி ஆறவைத்தப் பாலை சிறிது சிறிதாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர், அதில் வாசனைக்கு ஏலக்காய் தூள் சேர்த்து வழங்கவும்.