நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வசம்பின் மருத்துவ குணங்கள்!

வசம்பின் வேர்,  தண்டு,  இலை, பூ ஆகியவை மருந்தாகும்.  வயிற்றுப் போக்கு நீக்கும்.

News image
Updated On :24 மார்ச் 2021, 12:30 pm

நெ. இராமன்

வசம்பின் வேர்,  தண்டு,  இலை, பூ ஆகியவை மருந்தாகும்.  வயிற்றுப் போக்கு நீக்கும்.

இருமல்,  நரம்பு தளர்ச்சி,  வாய் துர்நாற்றம் ஆகியவற்றைப் போக்கும் தன்மை வசம்பிற்கு உண்டு.

வெட்டு காயங்களின் மீது வசம்புத் தூளை  வைத்து கட்டினால்  குணமாகும்.

வசம்பை சுட்டுத் தூளாக்கி  சுக்குத் தூளுடன்  கலந்து  வயிற்றின் மேல் பகுதியில் பூசினால்  வயிறு உப்புசம்  குணமாகும்.

வசம்பு தாள்களை  சிறுசிறு  துண்டாக்கி  நீரில்  போட்டு அரைமணி நேரம் கழித்து  குளித்தால்  குழந்தைகளுக்கு  தோல்நோய்  வராது.

வசம்புத் தூளை தேனில்  குழைத்து  குழந்தைக்கு  கொடுத்தால்  காய்ச்சல்  குணமாகும்.

வசம்பு   பித்தப்பை, சிறுநீர்ப்பை  கற்களை  கரைக்கும் தன்மை உடையது.

அரை தேக்கரண்டி  வசம்பு தூளுடன்  பனங்கற்கண்டு  சேர்த்து  உண்டு வர  நரம்பு தளர்ச்சி  குணமாகும்.

வெந்நீர், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை  கலந்து  கிருமி நாசினியாகவும்  பயன்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.