தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பிரண்டை ரசம் 

துவரம் பருப்பை குக்கரில் வேகவைத்து குழைய விடுங்கள். நீரை வடிகட்டி மசித்து கொள்ளுங்கள்.

News image
Updated On :20 அக்டோபர் 2021, 6:00 am IST

தேவையானவை:

பிரண்டை - கால் கிண்ணம்
துவரம்பருப்பு - கால் கிண்ணம்
கடுகு - 1தேக்கரண்டி
வரமிளகாய் - 3
பூண்டு பல் - 5
மிளகு, சீரகம்- தலா 2  தேக்கரண்டி
பெருங்காயம் - அரை  தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: 

துவரம் பருப்பை குக்கரில் வேகவைத்து குழைய விடுங்கள். நீரை வடிகட்டி மசித்து கொள்ளுங்கள். பிரண்டையை சிறுதுண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு லேசாக வதக்கி எடுக்கவும். வாணலியில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு கடுகு, வரமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கி வதக்கிய பிரண்டை துண்டுகளைச் சேர்க்கவும். பிறகு பருப்பு நீரை சேர்த்து கொதிக்கவிடவும். பிரண்டை  நன்றாக வெந்ததும் மஞ்சள் தூள், மசித்த துவரம்பருப்பு, பெருங்காயம், மிளகு, சீரகத்தூள், எலுமிச்சைச்சாறு அனைத்தையும் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இதை சூப் போன்று குடிக்கவும் செய்யலாம் அல்லது சாதத்தில் ரசம் போன்று  போட்டு பிசைந்தும் கொடுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.