தேவையானவை:
வெண்டைக்காய் - 100 கிராம்
கடலைமாவு - 200 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
வெங்காயம் - 4
பச்சைமிளகாய் - 3
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - 1 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
வெண்டைக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும. ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு இட்டு இரண்டையும் கலந்து கொள்ளவும். இத்துடன் நறுக்கிய வெண்டைக்காய், வெங்காயம், மிளகாய், சோம்பு சேர்த்து வதக்கவும். பின்னர், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, உப்பு இவைகளைச் சேர்த்து வதக்கி, பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு பிசைந்து ஒருமணி நேரம் வைக்கவும். பின்னர், நெய்யைவிட்டு நன்கு கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு நன்கு காய்ந்ததும், மாவுகலவையை சிறிது, சிறிதாக எடுத்து, விரல்களால் பிசறிவிட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். வெண்டைக்காய் பக்கோடா தயார். மிகவும் சுவையாக இருக்கும்.