12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

லட்டு 

வாணலியில் எண்ணெய்யைக் காய வைக்கவும். கடலை மாவை நீர் விட்டு இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து, பூந்திக் கரண்டியில் ஊற்றி, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெய்யில் தேய்க்கவும்.

Published On :


தேவையானவை:

கடலை மாவு - 2 கிண்ணம்
சர்க்கரை - 3 கிண்ணம்
லெமன் ஃபுட்கலர் - கால் தேக்கரண்டி
ஏலக்காய்பொடி - அரை தேக்கரண்டி
நெய் - 6  தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உடைத்த முந்திரிப் பருப்பு - 3 தேக்கரண்டி


செய்முறை: 

வாணலியில் எண்ணெய்யைக் காய வைக்கவும். கடலை மாவை நீர் விட்டு இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து, பூந்திக் கரண்டியில் ஊற்றி, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெய்யில் தேய்க்கவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, வெந்த பூந்திகளை வடிசட்டியில் போடவும். எண்ணெய் நன்றாக வடிந்து விடும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் வரை, நீர் ஊற்றி ஃபுட் கலர் சேர்த்து பாகு தயாரிக்கவும். ஏலக்காய்ப்பொடி சேர்க்கவும். பாகு கொதிக்கும்போது இடையிடையே நெய் விடவும். பாகு கொதி வந்ததும் இறக்கி மீதியுள்ள நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்க்கவும். பூந்தியைச் சேர்த்து நன்றாகக் கலந்து லட்டாகப் பிடிக்கவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.