பிரிட்டிஷ் அரசக்குடும்பத்தில் பிறந்து தம் 100-ஆவது பிறந்தநாளை நெருங்கும் முதல் அரசி, ராணி எலிசபெத் ஆவார்.
இங்கிலாந்து அரசி முதலாம் உலகப்போரையும் கண்டவர், இரண்டாம் உலகப் போரையும் கண்டவர். அவ்விரு போர்களின் போதும் அவர் எந்த மறைவிடத்திற்கும் செல்லாமல் துணிச்சலாக தனது அரண்மனையிலேயே இருந்தவர்.
அவர் எப்போதும் தொப்பி அணிந்து புன்னகைத் தவழ காட்சியளிப்பார். பிரிட்டிஷ் அரசு அவரது 100- ஆவது பிறந்த நாள் நெருங்குவதையொட்டி அவருடைய படம்பொறித்த பல தபால்தலைகளை வெளியிட்டிருக்கிறது.