தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாதம் மற்றும் நகங்களை பாதுகாக்க..

நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 12:30 am

கவிதா பாலாஜி

நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். நகங்களை வெட்டுவதற்கு முன்னால் நகங்களை மிதமான சூடுள்ள நீரில் சிறிது நேரம் ஊற வைத்து வெட்டுவதனால் மிகவும் எளிமையாக நகங்களை வெட்டலாம். 

பாத வெடிப்பிருந்தால் பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம். சொரசொரப்பான கற்களை கொண்டு பாதங்களை தேய்த்து குளித்து வந்தாலோ அல்லது ஸ்கிரப் பயன்படுத்தினாலோ உங்களது பாதங்களில் உள்ள இறந்த செல்கள் புதுப்பிக்கப்படும். பாதமும் மென்மையாக இருக்கும்.

உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊறவைத்துக் கழுவலாம். இதனால் பாதங்கள் சுத்தமாக இருக்கும். பாதங்களில் உள்ள அழுக்குகள் மற்றும் நகங்கள் சுத்தமாகும். கால்களுக்கு இதமாகவும் இருக்கும்.

பாதத்தில் உள்ள வெடிப்புகள் பாதங்களை அசிங்கமாக காட்டும். மேலும் இதன் வழியாக சில தொற்றுகளும் பரவலாம். அதுமட்டுமின்றி இது வலியையும் உண்டாக்கும். பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணெய் ஒரு தேக்கரண்டி, பன்னீர் இரண்டு தேக்கரண்டி, எலுமிச்சம் சாறு ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து வெந்நீரில் பத்து நிமிடம் கால்களை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.

உருளைக்கிழங்கை வேகவைத்த நீரில் கைகளை ஊற வைத்து தேய்ப்பதாலும், உருளைக்கிழங்கு தோலை கைகளின் மீது தேய்பதாலும் விரல்கள் மிருதுவாகவும் அழகாகவும் மாறும். விரல்கள் பளபளப்பாக இருக்கும். 

நகங்கள்  ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. 

நகங்கள் பளபளக்க கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெய்யை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.