கை வைத்தியம்!
தூக்கம் வராமல் தவிப்பவர்கள், நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் ஜாதிக்காய் தூள் ஒரு சிட்டிகை அளவு பாலில் கலந்து குடித்து வர குணமாகும்.


தூக்கம் வராமல் தவிப்பவர்கள், நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் ஜாதிக்காய் தூள் ஒரு சிட்டிகை அளவு பாலில் கலந்து குடித்து வர குணமாகும்.
சீரகத்தூளை வெந்நீரிலோ அல்லது கரும்புச்சாறிலோ கலந்து சாப்பிட லேசான கிறுகிறுப்பு, பித்தம் குறையும்.
அதிமதுரம் சிறு துண்டை நாவினுள் அடக்கி அதன் சாற்றை விழுங்கினால் வறட்டு இருமல், வயிற்று வலியைப் போக்கும்.
லவங்கப்பட்டை ஒரு துண்டு எடுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து குடித்து வர குடற்புண் ஆறும்.
திப்பிலி பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வர, மூச்சிரைப்பை குறைக்கும். சளியைக் கட்டுப்படுத்தும்.
தொந்தி குறைய..
அதிகமாக சாப்பிடக்கூடாது. அளவாக சாப்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
தூக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். பகலில் தூங்கவே கூடாது.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.
எலுமிச்சைச்சாறு, கொத்துமல்லிச்சாறு, இஞ்சிச்சாறு மூன்றும் சம அளவு கலந்து குடிக்கலாம்.
வாழைத்தண்டு, முள்ளங்கி இவற்றைப் பொடியாக நறுக்கி எலுமிச்சம் சாறு உப்பு சேர்த்து பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
இரண்டு பல் பூண்டு, சிறிது இஞ்சி இரண்டையும் நசுக்கி சிறிது தேன் கலந்து இரவில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் தொந்தி போய்விடும்.
அன்னாசிப் பழத்துண்டுகளுடன் சிறிது ஓமத்தூளை சேர்த்து இரவில் தண்ணீர்விட்டு காய்ச்சி மறுநாள் காலை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...