தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வீடே கல்விக் கூடம்!

பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள்  தற்போது  திறக்கப்பட்டாலும், இன்னும்  தொடக்கப்பள்ளி மாணவர்கள் வீட்டிலேயேதான்  முடங்கிக் கிடக்கிறார்கள்.  

News image
Updated On :22 செப்டம்பர் 2021, 6:00 am IST


பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள்  தற்போது  திறக்கப்பட்டாலும், இன்னும்  தொடக்கப்பள்ளி மாணவர்கள் வீட்டிலேயேதான்  முடங்கிக் கிடக்கிறார்கள்.  இந்நிலையில், பள்ளிக்குச் செல்லாமல் மாணவர்கள் பாடங்களை மறந்துவிடக்கூடாது என விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஆசாரிகாலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் சோ.சுப்புலட்சுமி மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடம் நடத்தி வருகிறார்.

இவரது பள்ளிக்கு வரும் அப்பகுதி மாணவர்கள் மற்றும் வேறு பள்ளியில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு  மாணவர்களுக்கும் வீட்டிற்கே சென்று பாடங்களை கற்பித்து வருகிறார். ஆசிரியர் சோ.சுப்புலட்சுமி நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""தொடக்கப்பள்ளி மாணவர்கள் பாடங்களை மறந்து விடக்கூடாது. வாசிக்கும் திறன் குறைந்து விடக்கூடாது என ஜூன் முதல் வாரத்திலிருந்து மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடம் கற்பித்து வருகிறேன். 

பாடம் நடத்துதல், கையெழுத்துப் பயிற்சி, வாசிப்பு பயிற்சி அளித்து வருகிறேன். தமிழ்ப் பாடத்தில் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், இலக்கணம் உள்ளிட்டவைகளும், சூழ்நிலையியலில் நீர்நிலை பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுவது குறித்தும், கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல் உள்ளிட்டவையும், ஆங்கிலத்தில் பாடம் மற்றும் இலக்கணமும், சமூக அறிவியலில் தலைநகரம் , அரசு முத்திரைகள் குறித்தும் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறேன். 

ஒரு வீட்டில் கற்பிக்கச் சென்றால், அருகில் உள்ள வீட்டில் உள்ள மாணவர்களையும் வரவழைத்து கற்பித்து வருகிறேன். இதற்கு நான் எவ்வித கட்டணமும் பெறுவதில்லை.  ஒவ்வொரு வீட்டிலும் சுமார் 40 நிமிடம் பாடங்களை கற்பிப்பேன். நேரில் சென்று பாடங்களை கற்பிப்பதால் எனக்கு மனதிற்கு முழு திருப்தி அளிக்கிறது. மாணவர்களும் சிறப்பாக படிக்கிறார்கள்'' என்றார். இவர், 2020- ஆம் ஆண்டு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.