எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

டிப்ஸ்..  டிப்ஸ்...

சமையல் அறையில் எறும்புகளின் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எறும்புகள் கூட்டமாக இருக்கும் இடத்தில் சிறிதளவு மஞ்சள் தூளை தூவினால் போதும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:31 pm IST


சமையல் அறையில் எறும்புகளின் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எறும்புகள் கூட்டமாக இருக்கும் இடத்தில் சிறிதளவு மஞ்சள் தூளை தூவினால் போதும்.

வேகவைக்காத உணவுகள் மீது கிருமித் தொற்றுகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும். மேலும் அவை எப்போதும் ஈரத்தன்மை இருக்கும் பகுதிகளில் பெருகும். அதனால் உங்கள் சமையல் அறையும், சமையல் பொருள்களை வைக்கும் இடமும் நன்றாக உலர்ந்த பகுதியாக எப்போதும் இருக்க வேண்டும்.

சமையலறையில் பயன்படுத்தப்படும் துணிகளில் பாக்டீரியா இருக்கும். அதனால் அவைகளை தினமும் நன்றாக சோப்பிட்டு துவைத்து, வெயிலில் காய வைத்து பயன்படுத்த வேண்டும்.

சமையல் அறையில் தரை, கதவு, அங்கிருக்கும் சுவிட்சுகள், கைப்பிடிகள் போன்ற அனைத்தையும் தினமும் துடைத்து சுத்தம் செய்வது அவசியம்.

டிடர்ஜென்ட் திரவத்தில் துணியை முக்கி, எக்ஸ்ஹாஸ்ட் பேன், சிம்மினி போன்றவைகளை வாரம் ஒரு முறை துடைத்து சுத்தம் செய்வது மிகவும் நல்லது.

சமையல் அறையில் குறைந்தது இரண்டு ஜன்னல்களாவது இருக்க வேண்டும். அதன் மூலம் நல்ல காற்றும், வெளிச்சமும் சமையல் அறைக்குள் வர வேண்டும். ஜன்னல்களை தினமும் துடைக்க வேண்டும்.

சமைக்கும் போது உணவுப் பொருள்களின் சிதறல்கள்கேஸ் ஸ்டவ்வில் விழும். அவைகளை அவ்வப்போதே அப்புறப்படுத்தி சுத்தப்படுத்திவிடுங்கள். நாளை சுத்தப்படுத்திக் கொள்ளலாம் என்று விட்டு வைத்தால் அவைகளை துடைத்து சுத்தப் படுத்துவதே பெரிய வேலையாகிவிடும்.

கேஸ் ஸ்டவ் பர்னரை தினமும் சூடான சோப் தண்ணீரில் முக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

மாதத்தில் ஒருமுறை ஃபிரிட்ஜை துடைத்து சுத்தம் செய்யுங்கள். அப்படி சுத்தம் செய்யாவிட்டால் அதில் இருந்து கெட்டவாடை வீசத் தொடங்கிவிடும். ஃபிரிட்ஜை சுத்தம் செய்யும் போது அதன் உள்ளே இருக்கும் பாட்டில்களையும் சுத்தம் செய்ய வேண்டும். அதன் உள் இருக்கும் தேவைப்படாத பொருட்களையும் பழைய பொருட்களையும் அவ்வப்போது நீக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

முட்டைகளை தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டு வைத்தால் 10 நாள்கள் வரை கெடாது.

வெயில் காலத்தில் மாவு புளிக்காமல் இருக்க வாழை இலை ஒரு துண்டு அல்லது வெண்டைக்காயின் மத்திய பகுதியை மாவில் போட்டு வைத்தால் மாவு புளிக்காது.

கோஸ் வேகும் போது 2 தேக்கரண் அரிசியை போடுங்கள். துர்நாற்றம் அடிக்காது.

சேனை வேக ரொம்ப நேரமாகும். ஆனால் கொஞ்சம் சமையல் சோடாவை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.

தோசைக்கு மாவரைக்கும்போது அதில் இரண்டு வெண்டைக்காய் காம்புகளைப் போட்டு அரைத்தால், தோசை தனி ருசியுடன் இருக்கும்! உளுந்தும் அதிகம் போட்டு அரைக்கும் தேவையிருக்காது.

உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.   

கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சிறிதளவு சோயா பீன்ஸ் சேர்த்து அரைத்தால், அந்த மாவில் செய்யும் சப்பாத்தி கூடுதல் சுவையுடனும், ஊட்டச்சத்துடனும் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.