மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

வெல்லம் பால் கொழுக்கட்டை

வாணலியில் பொடித்த வெல்லத்தைப் போட்டு, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிதமாக சூடுபடுத்தவும். வெல்லம் முழுமையாகக் கரைந்தவுடன் வடிகட்டவும்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2022, 6:00 am IST

தேவையான பொருள்கள்:

எண்ணெய்-  3 தேக்கரண்டி
காய்ச்சிய பால்- 1 கிண்ணம்
வெல்லம்- 1 கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி- அரை தேக்கரண்டி
சுக்குப் பொடி- 1 தேக்கரண்டி
அரிசி மாவு- 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல்- 1 கிண்ணம்

செய்முறை: 

வாணலியில் பொடித்த வெல்லத்தைப் போட்டு, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிதமாக சூடுபடுத்தவும். வெல்லம் முழுமையாகக் கரைந்தவுடன் வடிகட்டவும்.  பால் காய்ச்சி தனியே எடுத்து வைக்கவும். அரிசி மாவில் சிறிது எண்ணெய், உப்பு, சூடான தண்ணீர் ஊற்றி வைத்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

அகலமான பாத்திரத்தில் 3 கிண்ணம் தண்ணீர் கொதிக்க வைக்கவும். அதில் ஏளக்காய், சுக்குப் பொடி சேர்க்கவும்.  அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொதிக்கும் தண்ணீரில் மாவு உருண்டைகளைப் போட்டு,  சில நிமிடங்கள் வேக வைக்கவும்.  அதனுடன் காய்ச்சிய பாலையும் வெல்லத்தையும் கலக்கவும். 

அரிசி மாவு ஒரு தேக்கரண்டியை எடுத்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைக்கவும். இந்த மாவுக் கரைசல் கடைசியாகப் பாலில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்பு சிறிது நேரத்தில் தேங்காய்த் துருவலை பால் கொழுக்கட்டையின் மீது தூவி அடுப்பில் இருந்து இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.