தேவையான பொருள்கள்:
அதிமதுர பொடி, சுக்குப் பொடி, பனை வெல்லம் பொடி- தலா 1 தேக்கரண்டி
எலுமிச்சைப் பழம்-1
தண்ணீர்- 200 மி.லி.
செய்முறை:
பாத்திரத்தில் 200 மி.லி. தண்ணீர் விட்டு சூடானவுடன் அதில் அதிமதுரம் பொடி, பனை வெல்லம் பொடி, சுக்குப் பொடி சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் பாத்திரத்தை இறக்கும்போது, அதில் எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து இறக்கவும். சூடான சூப்பைப் பரிமாறவும். இந்த சூப் தூக்கமின்மையைப் போக்கும்.