மகளிர்மணி
பொள்ளா வடை (கேரளம்)
இட்லி அரிசியைக் கழுவி, புளித்த தயிர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும், இத்துடன் உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயத் தூள் சேர்த்து அரைக்கவும், கறிவேப்பிலையைக் கிள்ளி மாவில் சேர்க்கவும்.
தேவையான பொருள்கள்:
இட்லி அரிசி- 1 கிண்ணம்
புளித்த தயிர்- 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல்- கால் கிண்ணம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
மிளகாய் வற்றல்-5
கறிவேப்பிலை- சிறிதளவு
பெருங்காயத் தூள்- கால் மேசைக் கரண்டி
செய்முறை:
இட்லி அரிசியைக் கழுவி, புளித்த தயிர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும், இத்துடன் உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயத் தூள் சேர்த்து அரைக்கவும், கறிவேப்பிலையைக் கிள்ளி மாவில் சேர்க்கவும். சிறிய வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு, பொரித்தெடுக்கவும்.