தேவையானவை:
பச்சரிசி- 100 கிராம்
புழுங்கல் அரிசி- 50 கிராம்
காரட்- 100 கிராம்
சீரகம்- 1 தேக்கரண்டி
வெங்காயம்- 100 கிராம்
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
இரு வகை அரிசியையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊர வைக்க வேண்டும். மற்ற பொருள்களை அரைத்து சேர்க்க வேண்டும். தேவையான தண்ணீர் சேர்த்து உப்புச் சேர்த்துக் கரைக்க வேண்டும். தோசைக் கல்லைப் போட்டு அதில் முதலில் எண்ணெய் ஊற்றி ஊத்தப்பம் மாதிரி ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில், துருவிய காரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொஞ்சம் கொஞ்சம் கொத்தமல்லியை வதக்கி, மாவு மேலே போட்டு நன்றாக வேக விட்டு திருப்பிப் போட வேண்டும்.