முருங்கை இலை, புதினா இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்துகொள்ளவும். தினமும் இந்தப் பொடியில் இருந்து அரை தேக்கரண்டி எடுத்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். பல நோய்கள் குணமாகும்.
வாழைத்தண்டை சாப்பிட்டால், குடலில் சிக்கி கிடக்கும் தலைமுடி, நஞ்சு ஆகியன வெளியேறும். மூல நோயால் ஏற்படும் வலி குணமாகும். வாழைத்தண்டு உடலுக்கு வலிமையையும் அளிக்கும். ரத்த நோய்கள், பிறப்புறுப்பு நோய்களுக்கும் நல்ல மருந்தாகும்.
வாழைப்பூவின் சாறைத் தயிருடன் கலந்து சாப்பிட்டால் ரத்தப் பேதி சரியாகும். கை, கால் எரிச்சல், இருமல், மூலம், மேக நோய் ஆகியனவற்றையும் போக்கும்.
புளிப்பு ஏப்பம் உள்ளவர்கள் சீரகத்தைப் பொடி செய்து செய்து சூடான நீரில் போட்டுக் குடித்தால் குணமாகும்.
மஞ்சள் தூளை வேப்பெண்ணெயில் கலந்து மூக்குப் புண் மீது தடவினால், விரைவில் குணமடையும். நெய்யுடன் மஞ்சள் தூளைக் குழைத்துத் தடவினால், தொண்டைப் புண் குணமாகும்.