தமிழ்வாணனின் மனைவி மணிமேகலை, புலவர் பட்டயப் படிப்பை முறைப்படி பயின்றவர். இவர் எழுத்தாளரும் பத்திரிகையாளரும்கூட!
'உருகுது நெஞ்சம்; பெருகுஹது கண்ணீர்' என்ற இவரின் நாவலைப் படிப்பவர்கள் நெஞ்சைப் பறிகொடுப்பர். இது ஒரு கண்ணீர் காவியமாகும். பின்னர், 'அருள்', 'திருவருள்' ஆகிய இரண்டு ஆன்மிக இதழ்களின் ஆசிரியராகவும் 12 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழை பிழையாக யார் எழுதினாலும், தவறாமல் சுட்டிக் காட்டியவர் மணிமேகலை.
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.