கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோட்டாறு கோலப்பன்

கராத்தே போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து சாதனைகளைப் படைத்து வருகிறார் பள்ளி மாணவி தக்ஷயாஸ்ரீ.

ஈரோடு திண்டல் வேளாளர் மெட்ரிக். பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவர், தனது வெற்றிக்குக் காரணம் குறித்து கூறுகையில், ""எனது தந்தை கராத்தே பயிற்சியாளர். அவர்தான் வெற்றிக்குப் பின்னால் இருக்கிறார்.

2018-ஆம் ஆண்டில் புதுதில்லியில் தேசிய அளவிலான கராத்தே போட்டியில், தமிழகத்தின் சார்பில் தங்கம் வென்றேன். பின்னர், தென்ஆப்பிரிக்காவின் டர்பன் மாநகரில் நடைபெற்றகாமன்வெல்த் போட்டிகள், இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிட்டோரியா கராத்தே போட்டிகளிலும் பங்கேற்று, பரிசுகளைப் பெற்றேன்.

2019, 2020, 2023-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்றேன். கேரள மாநிலத்துக்கு உள்பட்ட திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்றேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.