புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குதிரைவாலி கருப்பட்டி ஆப்பம்

News image
Updated On :18 மே 2024, 6:30 pm

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தேவையான பொருள்கள்:

குதிரைவாலி அரிசி, இட்லி அரிசி - தலா 100 கிராம்

உளுந்து - 25 கிராம்

வெந்தயம் - அரை தேக்கரண்டி

கருப்பட்டி - 200 கிராம்

இளநீர் - அரை கிண்ணம்

செய்முறை:

முதலில் குதிரைவாலி அரிசியுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து இரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் நைசாக அரைக்கவும். பின்னர், இளநீரை முதல் நாளே வாங்கி வைத்து புளிக்க வைக்க வேண்டும். புளித்த இளநீரை அரைத்து வைத்துள்ள மாவுடன் கரைத்து 5 மணி நேரம் புளிக்கவிடவும். கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து, கரைத்து அடுப்பில் வைத்து கொதித்ததும் அப்படியே சூடாக வடிகட்டி மாவுடன் சேர்க்கவும். பின்பு ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி தேவையான மாவினை ஊற்றி ஒரு சுற்று சுற்றி மூடி வைத்து வேக விட்டு எடுக்கவும். சத்தான குதிரைவாலி கருப்பட்டி ஆப்பம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.