தேவையான பொருள்கள்:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கொள்ளு - அரை கிண்ணம்
உளுந்தம்பருப்பு, கடலைப் பருப்பு -தலா 2 தேக்கரண்டி
பூண்டு - 4
காய்ந்த மிளகாய் - 6
கறிவேப்பிலை, புளி - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். அதனுடன் ஒரு கப் கொள்ளு சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுக்கவும். நன்கு வறுபட்டதும், அதை வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றிவிட வேண்டும். அதன் பின் உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் பூண்டு தனித்தனியாக வறுத்து எடுக்கவேண்டும். பிறகு புளி சேர்த்து வதக்கவும். பின்னர் தேங்காய்த் துருவலை வறுத்து எடுக்க வேண்டும். இவை அனைத்தையும் சிறிது நேரம் ஆறவிடவும். அதன்பின் உப்பு சேர்த்து அவற்றை மையாக அரைக்கவும். கொள்ளுத் துவையல் தயார்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




