பாலாடையுடன் சிறிது எலுமிச்சைச் சாறைப் பிழிந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறியப் பிறகு குளித்தால் வறண்ட சருமம் பொலிவும் பெறும்.
பாலாடையுடன் கசகசாவை ஊற வைத்து அரைத்து, முகம், கை, கால்களில் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிப்பதும் சருமத்தை மென்மையாக்கும்.
பனிக் காலங்களில் தோல் நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துகொள்வது நல்லது.
மிகவும் வறண்ட சருமக்காரர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்புப் போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து தேய்த்துக் குளித்துவர வேண்டும்.
-நாகஜோதி கிருஷ்ணன்.
வேப்பம்பூ கஷாயம் உடலை வலிமையாக்கும்.
அருகம்புல் சாறு மாரடப்பைத் தடுக்கும்.
வெந்தயக் கீரை சமைத்து சாப்பிட இருமல் குணமாகும்.
வெண்டைக்காய் மூளையைப் பலப்படுத்தும்.
அடிக்கடி பேரிக்காய் சாப்பிட இதயம் படபடப்பாகும்.
-ஏ.மூர்த்தி.