தேவையான பொருள்கள்:
முற்றின தேங்காய்- ஒன்று
பச்சரிசி, சர்க்கரை -தலா 200 கிராம்
முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை -தலா -10
ஏலக்காய் -4
நெய் -இரண்டு தேக்கரண்டி
செய்முறை:
தேங்காயைத் துருவி அரைத்து வெந்நீர் ஊற்றி, கெட்டியான பாலாக எடுக்கவேண்டும். மீண்டும் ஒருமுறை தேங்காயை அரைத்து, தேவையான தண்ணீர் விட்டு பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பாலை கனமான பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதித்ததும் பச்சரிசியை ரவை போல் உடைத்து அதில் சேர்க்க வேண்டும்.
அரிசி வெந்ததும், சர்க்கரையைப் போட்டு கொதித்து பாயசம் போல ஆனதும், ஒரு கரண்டியில் நெய் ஊற்றி, அடுப்பில் வைத்து முந்திரி, கிஸ்மிஸ் பழத்தைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து, அதை பாயசத்தில் போட வேண்டும். ஏலக்காயை பொடி செய்து பாயசத்தில் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி, முதலில் எடுத்து வைத்திருக்கும் பாலை அதில் விட்டு சிறிது நேரம் கரண்டியால் கிளறி, பிறகு கீழே இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஜீரா போளி
கூந்தல் வளர வெந்தயம்...

பாயச பவுடர்

நெல்லையப்பா் கோயிலில் பக்தா்களுக்கு 12 மணி நேரம் உணவுப் பொருள்கள்
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

