கேரட்டை தோல் சீவி, ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். பிறகு எடுத்துத் துருவினால், கேரட் மிருதுவாகி எளிதாக துருவ வரும்.
உருளைக்கிழங்கை அரைத்துச் சேர்த்து வடை செய்தால், வடையின் சுவையே அலாதி தான்.
கோதுமையில் பரோட்டா செய்யும்போது ஒரு மேஜை கரண்டி ஓமம் கலந்து செய்யலாம். சுவையாக இருப்பதோடு எளிதில் ஜீரணமும் ஆகும்.
வெண்டைக்காய், கத்திரிக்காய் காரக்குழம்பு செய்யும்போது ஒரு மேஜை கரண்டி சீரகப் பொடி சேர்த்தால் குழம்பு சுவை மிகுந்திருக்கும்.
-ஆர். கீதா, ஆலுவா.
பாப்கான் நமத்துப் போய்விட்டால் பொட்டுக்கடலைக்குப் பதிலாக சட்னிக்கு வைத்து அரைக்கலாம்.
தோசை ஊற்றும்போது, சின்ன குழந்தைகளுக்கு சின்ன சின்னதாக ஊற்றி, தேனை மேலே ஊற்றியோ, நாட்டுச் சர்க்கரை தூவியோ, வாழைப்பழத்துடனோ கொடுக்க விரும்பிச் சாப்பிடுவர்.
ஓட்ஸை ஊற வைத்து அரைத்து உடன் உளுந்து மாவு, வெள்ளை ரவை, உப்பு சேர்த்துக் கலந்து தோசை வார்க்க மிருதுவாக இருக்கும்.
-மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.
உருளைக்கிழங்கை கறி செய்யும்போது சிறிதளவு தயிர் சேர்த்தால் சுவை தூக்கலாக இருக்கும்.
பூரிக்கு மாவு பிசையும் போது சிறிது சோள மாவு சேர்த்துப் பிசைந்தால் பூரி உப்பலாக இருக்கும்.
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

