ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

டிப்ஸ்... டிப்ஸ்...

கேரட்டை தோல் சீவி, ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். பிறகு எடுத்துத் துருவினால், கேரட் மிருதுவாகி எளிதாக துருவ வரும்.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 4:00 am IST

கேரட்டை தோல் சீவி, ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். பிறகு எடுத்துத் துருவினால், கேரட் மிருதுவாகி எளிதாக துருவ வரும்.

உருளைக்கிழங்கை அரைத்துச் சேர்த்து வடை செய்தால், வடையின் சுவையே அலாதி தான்.

கோதுமையில் பரோட்டா செய்யும்போது ஒரு மேஜை கரண்டி ஓமம் கலந்து செய்யலாம். சுவையாக இருப்பதோடு எளிதில் ஜீரணமும் ஆகும்.

வெண்டைக்காய், கத்திரிக்காய் காரக்குழம்பு செய்யும்போது ஒரு மேஜை கரண்டி சீரகப் பொடி சேர்த்தால் குழம்பு சுவை மிகுந்திருக்கும்.

-ஆர். கீதா, ஆலுவா.

பாப்கான் நமத்துப் போய்விட்டால் பொட்டுக்கடலைக்குப் பதிலாக சட்னிக்கு வைத்து அரைக்கலாம்.

தோசை ஊற்றும்போது, சின்ன குழந்தைகளுக்கு சின்ன சின்னதாக ஊற்றி, தேனை மேலே ஊற்றியோ, நாட்டுச் சர்க்கரை தூவியோ, வாழைப்பழத்துடனோ கொடுக்க விரும்பிச் சாப்பிடுவர்.

ஓட்ஸை ஊற வைத்து அரைத்து உடன் உளுந்து மாவு, வெள்ளை ரவை, உப்பு சேர்த்துக் கலந்து தோசை வார்க்க மிருதுவாக இருக்கும்.

-மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

உருளைக்கிழங்கை கறி செய்யும்போது சிறிதளவு தயிர் சேர்த்தால் சுவை தூக்கலாக இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும் போது சிறிது சோள மாவு சேர்த்துப் பிசைந்தால் பூரி உப்பலாக இருக்கும்.

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.