புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

நலம் தரும் உணவுகள்

சீத்தாப் பழத்தை ஆங்கிலத்தில் 'சுகர் ஆப்பிள்' என்று அழைப்பர்.

News image
Updated On :5 ஜூலை 2026, 4:16 am IST

சீத்தாப் பழத்தை ஆங்கிலத்தில் 'சுகர் ஆப்பிள்' என்று அழைப்பர். இதில், வைட்டமின் சி, கால்சியம் சத்துகள் மிகுதியாக உள்ளன. இதுதவிர மா, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் அடங்கியுள்ளன. அமெரிக்க, மேற்கத்தியத் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட இந்த சீத்தாப்பழம், ஸ்பானிய வணிகர்களால் ஆசியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.

மருத்துவக் குணங்களைக் கொண்ட சீத்தாப்பழத்தைச் சாப்பிட்டால், உடல் வலிமையாகும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். எலும்பு, பற்கள் பலம் அடையும். ரத்த ஓட்டம் சீராகும். நினைவாற்றால் திறன் அதிகரிக்கும். இதில், குளுக்கோஸ் அதிகம் உள்ளதால், உடல் சோர்வை அகற்றி, சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.

உடலுக்குச் சக்தியை அளிக்கும் நிலப்பச்சை பாசி எனும் ஸ்பைரூலினாவில் நுண்ணூட்ட சத்துகள் அதிகம் உள்ளன. இயற்கை ஊட்டச்சத்து உணவான இது, சிறிய அளவிலான தண்ணீர் தொட்டியிலும் வளரும்.

புரதச்சத்து, இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின்கள், குளோரோபில் செல் புதுப்பித்தல், நோய்களில் இருந்து பாதுகாத்தல் போன்ற ஏராளமான சத்துகள் உள்ளன. ரத்தச் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும். இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி, கொழுப்பு அளவைக் குறைக்கும். உடல் சோர்வையும் கற்றும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.