தேவையான பொருள்கள்:
வெண் பூசணிக்காய் (நடுத்தர அளவு) - 1
தேங்காய்த் துருவல் - 1 மூடி
தயிர் - கால் கிண்ணம்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - ஒரு மேஜை கரண்டி
கறிவேப்பிலை, உப்பு -தேவைக்கு
தாளிக்க - கடுகு, உ.பருப்பு, க. பருப்பு.
செய்முறை:
பூசணியை சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் போன்றவற்றை விழுதாக அரைக்கவும். வெண்பூசணியுடன் அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்கவிட்டு தயிர் சேர்த்து அடுப்பை அணைக்கவும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை தாளித்துக் கொட்டவும்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





