தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி -200 கிராம்
சிறிய தேங்காய் -ஒன்று
புளி -எலுமிச்சம்பழ அளவு
மிளகாய் வத்தல் -10
பெருங்காயப் பொடி, சீரகம், கடுகு - தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை -ஒரு ஆர்க்கு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கடலைப்பருப்பு -இரண்டு தேக்கரண்டி
செய்முறை:
புழுங்கல் அரிசியை சூடான வெந்நீர் விட்டு மூடி வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து நன்றாகக் களைந்து அதனுடன் துருவிய தேங்காய், புளி, உப்பு, மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயப் பொடி முதலியன போட்டு கெட்டியாக அரைத்து, மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை வாழை இலையில் எண்ணெய் தடவிக் கொண்டு தோசை போல் கையில் நன்றாகத் தட்டி, தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இந்த அடைகளைப் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும். அடை செய்வதற்கு முன்னால் இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பையும், ஒரு தேக்கரண்டி கடுகையும் ஒரு கரண்டியில் போட்டு எண்ணெய் ஊற்றி தாளித்து மாவில் கொட்டி, பிறகு மாவை பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முருங்கைக்கீரை தோசை

இளம் வழக்குரைஞரை போலீஸாா் காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பிசிஐ கடிதம்

வாகனங்களில் குப்பைகளை மூடி எடுத்துச் செல்ல வலியுறுத்தல்

சூடான பால் கொட்டி காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
