தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி -200 கிராம்
சிறிய தேங்காய் -ஒன்று
புளி -எலுமிச்சம்பழ அளவு
மிளகாய் வத்தல் -10
பெருங்காயப் பொடி, சீரகம், கடுகு - தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை -ஒரு ஆர்க்கு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கடலைப்பருப்பு -இரண்டு தேக்கரண்டி
செய்முறை:
புழுங்கல் அரிசியை சூடான வெந்நீர் விட்டு மூடி வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து நன்றாகக் களைந்து அதனுடன் துருவிய தேங்காய், புளி, உப்பு, மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயப் பொடி முதலியன போட்டு கெட்டியாக அரைத்து, மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை வாழை இலையில் எண்ணெய் தடவிக் கொண்டு தோசை போல் கையில் நன்றாகத் தட்டி, தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இந்த அடைகளைப் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும். அடை செய்வதற்கு முன்னால் இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பையும், ஒரு தேக்கரண்டி கடுகையும் ஒரு கரண்டியில் போட்டு எண்ணெய் ஊற்றி தாளித்து மாவில் கொட்டி, பிறகு மாவை பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்

அனுப்பானடி பகுதியில் குப்பைத் தொட்டிகள் வைக்க வலியுறுத்தல்
கோதுமை மாவு அப்பம்
சம்பா வடை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


