தேவையான பொருள்கள்:
சர்க்கரை -1கிண்ணம்
புளிக்காத இட்லி மாவு -1கிண்ணம்
சமையல் சோடா -1/4 மேஜைக்கரண்டி
ஆரஞ்சு கலர் பவுடர் -1/4 மேஜைக்கரண்டி
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் அளவுக்குப் பாகு காய்ச்சவும். ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, சோடா உப்பு, கலர் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் மாவு கலவையை சிறு, சிறு உருண்டைகளாக போட்டு நன்றாக வெந்தவுடன் எடுத்து, சூடான பாகில் மிட்டாய் உருண்டைகளை போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்தால் சுவையான தேன்மிட்டாய் தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP

தீ விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு
கோதுமை மாவு அப்பம்
கோதுமை மாவு பிட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


