பிஞ்சுப் புடலங்காய், பூசணி, சௌசௌ, பரங்கிக்காய் என்று நார்ச்சத்துள்ள காய்கறிகளை கூட்டாக சமைத்துச் சாப்பிட வேண்டும்.
காரக்குழம்பு, புளிக்குழம்புகளைத் தவிர்த்து பருப்பு வகைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உஷ்ண கட்டியிலிருந்து காப்பாற்றும்.
பிரிட்ஜில் தினமும் தர்பூசணி, கிர்ணிப்பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை சேர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்துக்கொண்டு தேவையானபோது எடுத்துச் சாப்பிடலாம்.
எலுமிச்சம், ஆரஞ்சு, தக்காளி, திராட்சை போன்ற பழ வகைகளை சாறாகப் பிழிந்து கோடையில் அருந்தும் பொழுது வெயிலுக்குக் குளுமையாக இருக்கும்.
சப்பாத்தி, பரோட்டா போன்ற டிபன்களை தவிர்த்து இட்லி, தோசை, உப்புமா, இடியாப்பம் போன்ற டிபன்களை செய்து சாப்பிடலாம்.
ஆர்.ஜெ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







