படித்த மனிதர் ஒருவரும்
படியா மனிதர் ஒருவரும்
பயணம் போக நினைத்தனர்!
பேருந்து நிலையம் சென்றனர்
செல்லும் ஊரினை படித்தவர்
தேர்வு செய்து அமர்ந்திட்டார்!
பச்சை சிவப்பு வண்ணங்கள்
செல்லும் ஊரைக் காட்டுமா?
படியா மனிதர் குழம்பினார்
தவித்து தவித்து புலம்பினார்!
படித்த மனிதர் உதவிட
பயணம் செய்யும் ஊரினை
கண்டு தெளிந்து தேறினார்!
கண்கள் இருந்தும் பயனற்று
போனதை உணர்ந்து வருந்தினார்
கண்கள் இரண்டும் கல்வியால்
துலக்கம் பெறுமே உண்மையாய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.