திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காந்தி மகான்...

அக்டோபர் இரண்டு திருநாளாம் யார்க்கும் இனித்திடும் நன்னாளாம் அகிலம் நினைத்திடும் பெருநாளாம் அண்ணல் பிறந்த பொன்னாளாம்! போர் பந்தரில் பிறந்தாராம் மோகன தாசென அழைத்தாராம் போரினை அறவே வெறுத்தாராம் புதுமை வழ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:40 am

அக்டோபர் இரண்டு திருநாளாம்

யார்க்கும் இனித்திடும் நன்னாளாம்

அகிலம் நினைத்திடும் பெருநாளாம்

அண்ணல் பிறந்த பொன்னாளாம்!

போர் பந்தரில் பிறந்தாராம்

மோகன தாசென அழைத்தாராம்

போரினை அறவே வெறுத்தாராம்

புதுமை வழிகள் வகுத்தாராம்!

அன்பின் வலிமை கண்டாராம்

அனைவரும் சமமெனக் கொண்டாராம்

வன்முறை கேடு என்றாராம்

வல்லரசு தன்னையே வென்றாராம்!

அண்ணல் தலைமை ஏற்றாராம்

அனைவரும் ஒன்று திரண்டாராம்

வெள்ளையர் மிகவும் மிரண்டாராம்

விடுதலை தந்து பறந்தாராம்!

மகாத்மா வாக உயர்ந்தாராம்

மக்கள் உயர உழைத்தாராம்

சகாப்த மொன்று படைத்தாராம்

சத்தியம் வெல்ல வைத்தாராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.