புதுவை, குயவர்பாளையத்தில் வசித்த ஒரு பொம்மை செய்பவரிடம் பாரதமாதா பொம்மை செய்து தருமாறு கேட்டார் வ.வே.சு.ஐயர். அணிகலன்கள் எதுவுமில்லாமல் கூந்தல் முன்புறம் விரிந்து பரந்து கிடப்பதுபோல அமைய வேண்டும் என்று கூறியிருந்தார்.
அவரும் அதுபோல பொம்மையை வடிவமைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பாரதியார், ""ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?'' என்று கோபமாகக் கேட்டார்.
""அந்நியர்கள்தான் எல்லா செல்வங்களையும் சுரண்டிச் சென்று விட்டார்களே!'' என்றார் வ.வே.சு.ஐயர் வருத்தத்துடன்.
கோபம் குறையாத பாரதி, ""பாரதமாதாவுக்கு என்ன குறை? அந்நியர்கள் எல்லாவற்றையுமா எடுத்துக் கொண்டுவிட்டார்கள்? சிதறிக்கிடந்த ஒன்றிரண்டைத்தானே பொறுக்கிக் கொண்டார்கள்! வற்றாத கங்கையும் காவிரியும் இன்னும் இருக்கின்றதே! கலை, கவிதை போன்ற செல்வங்கள் அப்படியே இருக்கின்றனவே! அவைகள்தானே பாரதமாதாவுக்கு அணிகலன்கள். எனவே பொம்மைக்கு எல்லா அலங்காரங்களையும் செய்யுங்கள்'' என்று அதட்டினார். அவர் ஆசைப்படியே பொம்மை அழகாக சகலவித அலங்காரங்களுடன் அமைக்கப் பெற்றது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


