தாய் சொல்லைத் தட்டாதே!
குரங்கு வந்து கூப்பிட்டதாம் குட்டி முயலும் ஓடியதாம்! குரங்கு போன இடமெல்லாம் குட்டியும் கூடச் சென்றதுவாம்! இருளத் தொடங்கி விட்டதனால் இரண்டும் திரும்பி நடந்தனவாம்! குரங்கு சென்றதும், வீட்டுக்கு குட்டி ம


குரங்கு வந்து கூப்பிட்டதாம்
குட்டி முயலும் ஓடியதாம்!
குரங்கு போன இடமெல்லாம்
குட்டியும் கூடச் சென்றதுவாம்!
இருளத் தொடங்கி விட்டதனால்
இரண்டும் திரும்பி நடந்தனவாம்!
குரங்கு சென்றதும், வீட்டுக்கு
குட்டி முயலும் வந்ததுவாம்!
இருட்டிடும் வரையில் எங்கிருந்தாய்?
என்றே அம்மா கேட்டதுவாம்!
குரங்குடன் காட்டில் சுற்றியதை
குட்டி முயலும் சொன்னதுவாம்!
நண்பரைத் தேர்வு செய்திடும்முன்
நன்கு சிந்தனை செய்திடணும்!
பண்பில், செயலில் நல்லவராய்ப்
பார்த்தே நட்பு கொண்டிடணும்!
நன்மை விளைவதும் நட்பாலே!
நாடும் தீமையும் நட்பாலே!
அந்தக் குரங்கன் கெட்டவனே
அவனுடன் நட்பை விட்டுவிடு!
என்றே அம்மா சொன்னதுவாம்
ஏற்றிட வில்லை குட்டிமுயல்!
என்றும் போல குரங்குடனே
எங்கும் சுற்றித் திரிந்ததுவாம்!
ஒருநாள் குட்டியை மரத்தடியில்
உட்கார்ந் திருக்கச் சொல்லிவிட்டு
சிறுத்தைப் புலியின் கொல்லைக்குள்
திருட்டுக் குரங்கு நுழைந்ததுவாம்!
திரும்பிய குரங்கின் தலையினிலே
திருடிய வாழைப் பழத்தாராம்!
சிறுத்தைப் புலியும் பிடித்ததுவாம்
செமஅடி விழுந்ததாம் குரங்குக்கு!
கூடச் சென்ற குட்டிக்கும்
குட்டு விழுந்ததாம் தலையினிலே!
தேடிச் சென்ற அம்மாதான்
சிறையி லிருந்து மீட்டதுவாம்!
தீயவர் நட்பால் தீமைதான்
தெரிந்து கொண்ட குட்டிமுயல்
தாயின் சொல்லை இனிமேல்நான்
தட்டிட மாட்டேன் என்றதுவாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...