தஞ்சைப் பெரிய கோயிலது
தமிழர் பெருமை பறைசாற்றும்
கங்கை கொண்ட சோழபுரம்
கலைகள் பேசும் கோயிலடா!
அலைகள் பேசும் மாமல்லை
அடடா சிற்பக் கலைக்கூடம்
கலையின் உச்ச நிலையன்றோ
காலைத் தூக்கும் நடராசர்
தாயைப் போலக் குற்றாலம்
தழுவி நம்மைக் குளிப்பாட்டும்
பாயும் காவிரி கல்லணையில்
பரவி நிற்கும் அழகைப்பார்
மதுரை நகரின் அழகோடு
மருதம் பேசும் ஆனைமலை
மலைகள் அரசி உதகையிலே
வரையும் வண்ணக் கோலங்கள்
பொதிகை மலையில் மூலிகைகள்
பொருந்தி நிற்கும் அழகைப்பார்
எதுகை மோனை அழகுடனே
இயற்கைத் தாயின் அன்பைப்பார்
கோடைக் கானல் குளிரூட்டும்
கோபு ரங்கள் வழிகாட்டும்
நாடி நரம்பு விருந்தோம்பும்
நமது நாடு தமிழ்நாடு