டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கதைப்பாடல்: மனபேதம் - மதபேதம்!

இந்த மதம்நான் அந்த மதம்நீ  என்பது எல்லாம் வீண் பேச்சு!

News image
Updated On :19 டிசம்பர் 2015, 10:57 am

மு.கலிய பெருமாள்

இந்த மதம்நான் அந்த மதம்நீ

  என்பது எல்லாம் வீண் பேச்சு!

எந்த மதம்நீ என்றிருந் தாலும்

  இறைவன் வழியில் வாழ்ந் திடுவாய்!

இறைவன் வழியில் வாழ்வது என்றால்

  எங்கோ இல்லை அவ் வாழ்வு

இறைவன் உனக்குள் இருப்பத னால்நீ

  எண்ணிடும் வாழ்வே உன் வாழ்வாம்!

எண்ணம் நலமாய் இருந்தால் வாழ்வு

 இனிதாய் அமையும்; அது அன்றி

எண்ணக் கெடுதல் இருந்தால் வாழ்வில்

 என்றும் அல்லல் தான் அறிவாய்!

எனவே தூய எண்ணம் கொண்டால்

 இனிதாய் அமையும் உன் வாழ்வு!

இனிதாய் வாழ்வு இருந்தே விட்டால்

  எந்த மதம்நீ என்பது வீண்!

மதத்தில் பேதம் என்பது எல்லாம்

 மனத்தின் பேதம் தான்; எனவே

மனத்தில் தூய எண்ணம் கொண்டே

 மேலாம் வாழ்வைப் பெறுவாயே..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.