ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

முத்துக் கதை: செய்வனத் திருந்தச் செய்!

ஜெர்மனியில் ஒரு சிற்பக் கூடத்திற்கு சென்ற பார்வையாளர், சிலை செதுக்கும் சிற்பியின் திறமை கண்டு வியந்து பாராட்டினார். அப்போது பக்கத்தில் இருந்த சிலை ஒன்றையும் கவனித்தார்! சிற்பி செதுக்கிக் கொண்டிருப்பதும், பக்கத்தில் உள்ள சிலையும் ஒன்றாகவே இருந்தது!

News image
Updated On :30 மே 2015, 9:13 am

ஜெர்மனியில் ஒரு சிற்பக் கூடத்திற்கு சென்ற பார்வையாளர், சிலை செதுக்கும் சிற்பியின் திறமை கண்டு வியந்து பாராட்டினார். அப்போது பக்கத்தில் இருந்த சிலை ஒன்றையும் கவனித்தார்! சிற்பி செதுக்கிக் கொண்டிருப்பதும், பக்கத்தில் உள்ள சிலையும் ஒன்றாகவே இருந்தது!

பார்வையாளர் சிற்பியிடம்,""ஏற்கெனவே இதுபோல ஒரு சிலை உள்ளதே எதற்கு அதுபோல இன்னொரு சிலை செதுக்குகிறீர்கள்?'' என்றார்.

அதற்கு சிற்பி,""ஏற்கெனவே செதுக்கி வைத்துள்ள சிலையில் குறை உள்ளது'' என்றார்.

""அப்படியா?'' என்று வியந்த பார்வையாளர், குறையுள்ள சிலையை கூர்மையாகப் பார்த்தார். அவர் கண்களுக்கு எந்தக் குறையும் தென்படவில்லை! சிற்பியிடம்,""இதில் குறை ஏதும் இல்லையே!'' என்றார். அதற்கு சிற்பி, ""சிலையின் வலது கன்னத்தில் ஒரு சிறிய மெல்லியக் கோடு இருக்கும் பாருங்கள்.'' என்றார். சிலையின் அருகில் சென்று உற்றுப் பார்த்தபோதுதான் அந்தக் கோடு தெரிந்தது.

""அது சரி, இச்சிலையை எங்கு வைக்கப் போகிறீர்கள்?'' என்று பார்வையாளர் கேட்டார்.

""20 அடி உயரப் பீடத்தின் மேல் இச்சிலையை நிறுவ உள்ளோம்''என்றார் சிற்பி.

அதற்கு பார்வையாளர் ஏளனமாகச் சிரித்துக் கொண்டே,""நீங்கள் அநாவசியமாக இன்னொரு சிலை வடிக்கிறீர்கள்...,20 அடி உயரத்தில் இருக்கும் சிலையின் முகத்தில் உள்ள மெல்லிய கோடு கீழிருந்து பார்ப்பவருக்கு தெரியப்போவது இல்லை.'' என்றார்.

அதற்கு சிற்பி, ""எனக்குத் தெரியும்....., மற்றும் பிறருக்காக வேலை செய்வதைவிடவும் ஆத்ம திருப்திக்காக வேலை செய்வது நல்லது அல்லவா?'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.