திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

முத்துக் கதை: தீர்ப்பு!

கல்லணையைக் கட்டி இன்றளவும் கீர்த்தியுடன் மக்கள் மனதில் வாழும் மன்னன் கரிகால் சோழன்! அந்த அரசன் முன்பு அரண்மனைக் கொலு மண்டபத்தில் வழக்கு ஒன்று வந்தது.

News image
Updated On :8 ஏப்ரல் 2016, 4:36 pm IST

கல்லணையைக் கட்டி இன்றளவும் கீர்த்தியுடன் மக்கள் மனதில் வாழும் மன்னன் கரிகால் சோழன்! அந்த அரசன் முன்பு அரண்மனைக் கொலு மண்டபத்தில் வழக்கு ஒன்று வந்தது.

நாங்கூரைச் சேர்ந்த சாத்தான் என்பவன் தனது நிலத்தையும் அதிலிருந்த கிணற்றையும் நூறு பொற்காசுகளுக்கு காத்தான் என்பவனிடம் விற்று விட்டான்.

காத்தான் கடுமையாக உழைத்து பயிரிட்டு நல்ல விளைச்சலைக் கண்டான். இதைப் பார்த்த சாத்தானுக்குப் பொறாமை ஏற்பட்டது!

எனவே அரசன் கரிகாலனிடம் சென்று, ""மன்னா! நான் நிலத்தையும், கிணற்றையும்தான் காத்தானுக்கு விற்றேன்! அதிலுள்ள தண்ணீரை அல்ல'' என்று வம்படி செய்தான்.

கரிகாலன் புருவத்தை உயர்த்தி எல்லோரும் அதிரும்படியான தீர்ப்பை வழங்கினான். ""சாத்தான்! நீ சொன்னபடி உன் தண்ணீர் காத்தான் நிலத்தில் உள்ளது. மிகவும் சரி...,இவ்வளவு நாள் உன் தண்ணீரை காத்தான் கிணற்றில் வைத்திருந்ததற்கு வாடகையாக ஒரு ஆண்டுக்கு பன்னிரண்டு மூட்டை நெல்லை, உன் கிணற்றையும், நிலத்தையும் வாங்கிய காத்தானுக்கு வழங்கத் தீர்ப்பளிக்கிறேன்'' என்றான் கரிகாற்சோழன்!

வசமாகச் சிக்கிக்கொண்ட சாத்தான், கரிகால் சோழன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். "இனி ஜென்மத்துக்கும் வம்படி வழக்கு செய்ய மாட்டேன்' என சாத்தானிடம் சத்தியம் வாங்கினான் மன்னன் கரிகாலன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.