கல்லணையைக் கட்டி இன்றளவும் கீர்த்தியுடன் மக்கள் மனதில் வாழும் மன்னன் கரிகால் சோழன்! அந்த அரசன் முன்பு அரண்மனைக் கொலு மண்டபத்தில் வழக்கு ஒன்று வந்தது.
நாங்கூரைச் சேர்ந்த சாத்தான் என்பவன் தனது நிலத்தையும் அதிலிருந்த கிணற்றையும் நூறு பொற்காசுகளுக்கு காத்தான் என்பவனிடம் விற்று விட்டான்.
காத்தான் கடுமையாக உழைத்து பயிரிட்டு நல்ல விளைச்சலைக் கண்டான். இதைப் பார்த்த சாத்தானுக்குப் பொறாமை ஏற்பட்டது!
எனவே அரசன் கரிகாலனிடம் சென்று, ""மன்னா! நான் நிலத்தையும், கிணற்றையும்தான் காத்தானுக்கு விற்றேன்! அதிலுள்ள தண்ணீரை அல்ல'' என்று வம்படி செய்தான்.
கரிகாலன் புருவத்தை உயர்த்தி எல்லோரும் அதிரும்படியான தீர்ப்பை வழங்கினான். ""சாத்தான்! நீ சொன்னபடி உன் தண்ணீர் காத்தான் நிலத்தில் உள்ளது. மிகவும் சரி...,இவ்வளவு நாள் உன் தண்ணீரை காத்தான் கிணற்றில் வைத்திருந்ததற்கு வாடகையாக ஒரு ஆண்டுக்கு பன்னிரண்டு மூட்டை நெல்லை, உன் கிணற்றையும், நிலத்தையும் வாங்கிய காத்தானுக்கு வழங்கத் தீர்ப்பளிக்கிறேன்'' என்றான் கரிகாற்சோழன்!
வசமாகச் சிக்கிக்கொண்ட சாத்தான், கரிகால் சோழன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். "இனி ஜென்மத்துக்கும் வம்படி வழக்கு செய்ய மாட்டேன்' என சாத்தானிடம் சத்தியம் வாங்கினான் மன்னன் கரிகாலன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



