பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

முத்துக் கதை: தீர்ப்பு!

கல்லணையைக் கட்டி இன்றளவும் கீர்த்தியுடன் மக்கள் மனதில் வாழும் மன்னன் கரிகால் சோழன்! அந்த அரசன் முன்பு அரண்மனைக் கொலு மண்டபத்தில் வழக்கு ஒன்று வந்தது.

News image
Updated On :8 ஏப்ரல் 2016, 4:36 pm IST

கல்லணையைக் கட்டி இன்றளவும் கீர்த்தியுடன் மக்கள் மனதில் வாழும் மன்னன் கரிகால் சோழன்! அந்த அரசன் முன்பு அரண்மனைக் கொலு மண்டபத்தில் வழக்கு ஒன்று வந்தது.

நாங்கூரைச் சேர்ந்த சாத்தான் என்பவன் தனது நிலத்தையும் அதிலிருந்த கிணற்றையும் நூறு பொற்காசுகளுக்கு காத்தான் என்பவனிடம் விற்று விட்டான்.

காத்தான் கடுமையாக உழைத்து பயிரிட்டு நல்ல விளைச்சலைக் கண்டான். இதைப் பார்த்த சாத்தானுக்குப் பொறாமை ஏற்பட்டது!

எனவே அரசன் கரிகாலனிடம் சென்று, ""மன்னா! நான் நிலத்தையும், கிணற்றையும்தான் காத்தானுக்கு விற்றேன்! அதிலுள்ள தண்ணீரை அல்ல'' என்று வம்படி செய்தான்.

கரிகாலன் புருவத்தை உயர்த்தி எல்லோரும் அதிரும்படியான தீர்ப்பை வழங்கினான். ""சாத்தான்! நீ சொன்னபடி உன் தண்ணீர் காத்தான் நிலத்தில் உள்ளது. மிகவும் சரி...,இவ்வளவு நாள் உன் தண்ணீரை காத்தான் கிணற்றில் வைத்திருந்ததற்கு வாடகையாக ஒரு ஆண்டுக்கு பன்னிரண்டு மூட்டை நெல்லை, உன் கிணற்றையும், நிலத்தையும் வாங்கிய காத்தானுக்கு வழங்கத் தீர்ப்பளிக்கிறேன்'' என்றான் கரிகாற்சோழன்!

வசமாகச் சிக்கிக்கொண்ட சாத்தான், கரிகால் சோழன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். "இனி ஜென்மத்துக்கும் வம்படி வழக்கு செய்ய மாட்டேன்' என சாத்தானிடம் சத்தியம் வாங்கினான் மன்னன் கரிகாலன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.