நீண்ட காலத்திற்குப் பிறகு தன் பள்ளி ஆசிரியரை தற்செயலாகச் சந்தித்தான் ஒருவன். ஆசிரியருக்கும் தன் பழைய மாணவனைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இருவரும் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசி மகிழ்ந்தார்கள்.
பழைய மாணவன் ஆசிரியரிடம், ""உங்களிடம் படித்த மாணவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான முன்னேற்றம் அடைவதில்லையே....., சிலர் தாழ்ந்தும், சிலர் உயர்ந்தும் இருக்கிறார்களே அது ஏன்?'' என்று
கேட்டான்.
""ஆசிரியர்களுக்கு எரிச்சலூட்டும், ஏமாற்றமூட்டும் கேள்விதான் இது! என்றாலும் நான் இதற்காக வருத்தமோ கோபமோ அடையவில்லை. ஓர் உதாரணம் சொல்கிறேன் கேள்''
""சொல்லுங்கள் ஐயா''
""தூண்டில் போட்டு மீன் பிடிக்கக் கற்றுக் கொள்கிறார்கள் இருவர். ஒருவன் ஆறு, குளம், ஏரிகளில் தூண்டில் போட்டு ஏராளமான மீன்களைப் பிடித்து சந்தோஷமாக வாழ்கிறான். மற்றவன் செயற்கையான நீச்சல் குளத்தில் தூண்டிலைப் போட்டுவிட்டுக் காத்திருக்கிறான். மீன்கள் சிக்கவில்லை என்று அழுகிறான். கற்ற கல்விக்குச் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பயன் படுத்திக்கொள்பவன் சிறப்படைகிறான்...,தவறான இடத்தைத் தேர்ந்தெடுப்பவன் சிறுமையடைகிறான்..இவ்வளவே!''
புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தலையாட்டினான் அந்தப் பழைய மாணவன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டத்தின் முன் அனைவரும் சமம்: போக்சோ வழக்கில் மத்திய அமைச்சர் மகன் கைது!

11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளைப் பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!
டிராக்டா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
கஞ்சா வைத்திருத்த சிறுவன் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

