ஏன் துளிர்க்கவில்லை?

கண்ணதாசன் ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது, ""கண்ணனில் கானம் கேட்டால் பட்ட மரம் துளிர்க்கும்'' என்று சொன்னார். கூட்டத்திலிருந்த ஒருவர், ""அப்படியானால் கண்ணன் கையில் இருக்கும் புல்லாங்குழல் ஏன் துளிர்க்கவில்லை?'' என்று கேட்டார்.
ஏன் துளிர்க்கவில்லை?

கண்ணதாசன் ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது, ""கண்ணனில் கானம் கேட்டால் பட்ட மரம் துளிர்க்கும்'' என்று சொன்னார். கூட்டத்திலிருந்த ஒருவர், ""அப்படியானால் கண்ணன் கையில் இருக்கும் புல்லாங்குழல் ஏன் துளிர்க்கவில்லை?'' என்று கேட்டார்.

அதற்கு கண்ணதாசன், ""கண்ணனில் கைகளில் புல்லாங்குழல் பட்டுக்கொண்டே இருக்கிறது. அதனால் அதற்கு மீண்டும் பிறவியே கிடையாது. நேராக சொர்க்கம்தான்! ஆகவே புல்லாங்குழல் துளிர்க்கவில்லை!'' என்று பதில் கூறி அசத்தினார் கண்ணதாசன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com