சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சுமை குறையும்!

ஆப்ரஹாம் லிங்கனிடம் ஒருவர், ""எனக்கு ஒருவன் சகிக்க முடியாத துன்பம் இழைத்து விட்டான்! அதை என்னால் மறக்க முடியவில்லை!'' என்றார்.

News image
அ.ராஜாரகுமான், கம்பம். 
Updated On :29 டிசம்பர் 2017, 9:51 am

அ. ராஜா ரகுமான்

ஆப்ரஹாம் லிங்கனிடம் ஒருவர், ""எனக்கு ஒருவன் சகிக்க முடியாத துன்பம் இழைத்து விட்டான்! அதை என்னால் மறக்க முடியவில்லை!'' என்றார். அவரிடம் லிங்கன், "" அவனுக்கு மிகக் கடுமையாக ஒரு கடிதம் எழுதி அதை என்னிடம் காண்பியுங்கள்!'' என்றார். அவரும் உடனே மிகமிகக் கடுமையாக காரசாரமாக தன்னைத் துன்புறுத்தியவனுக்கு ஒரு கடிதம் எழுதி அதை லிங்கனிடம் காண்பித்தார். லிங்கனும் அதைப்படித்தார். புன்சிரித்தார். 
""என்ன தபாலில் சேர்த்துவிடலாமா?'' என்று கேட்டார் கடிதம் எழுதியவர். ""வேண்டாம்!'' கடிதத்தைக் கிழித்து எறிந்து விடுங்கள்! நடந்ததை மறந்து விடுங்கள்! மனமாற மன்னித்து விடுங்கள். உங்கள் சுமை குறைந்துவிடும்'' என்று கூறினார் லிங்கன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.