கல்கி தன் இல்லத் திருமணத்திற்கு பெரியாரை அழைத்திருந்தார். முகூர்த்த நேரத்தைத் தவிர்த்து மாலையில் மணமக்களை வாழ்த்தச் சென்றார் பெரியார்! ""ஏன் காலையில் வரவில்லை?'' என்று கேட்டார் கல்கி. அதற்கு பெரியார், ""நான் கருப்புச் சட்டை அணிபவன்! சுபநிகழ்ச்சி நடக்கும்பொழுது உங்கள் உறவினர்களுக்கு அது அபசகுனமாகத் தெரியும்....அதனால்தான் மாலையில் வந்துள்ளேன்!'' என்றார்.
பெரியாரின் உயர்ந்த பண்பைக் கண்டு அனைவரும் வியந்தார்கள்!