உண்மை அறிக!
"கருத்து மிக்க பழமொழிகள்
கணக்கில்லாமல் உள்ளன! - அதை
அர்த்தம் மாற்றிக் கூறுவார்
அவற்றின் உண்மை அறிக நீ!''
என்று மாமா சொன்னதும்
ஆர்வத்தோடு அவர் பேச்சைக்
கேட்க அருகில் அமர்ந்திட்டோம்!
ஆவலோடு கவனித்தோம்!
"....."பந்தி யென்றால் முந்துக!...'
பழமொழியின் பொருளென்ன?
வந்தவர்கள் மகிழ்ந்திட
விருந்து படைக்க முந்து நீ...
..."கல்லைக் கண்டால் நாயில்லை...
நாயைக் கண்டால் கல்லில்லை...'
சொல்லு வார்கள் பழமொழி
உள்ள பொருளும் தெரியுமா?....
....நல்ல கலைஞன் சிலையிலே
நாயைக் கண்டால் கல் இல்லை!
கலை ரசனை இல்லையேல்
கல்லைக் கண்டால் நாயில்லை!....
...."ஆவதெல்லாம் பெண்களால்....
அழிவதெல்லாம் பெண்களால்!...'
யாவருமே கூறுவர்!....
அந்த மொழியின் பொருளென்ன?
...நன்மை ஆகும் பெண்களால்!...
தீமை அழியும் பெண்களால்!....
உண்மையான பொருள் இதை
உணர வேண்டும் தம்பி நீ!...''
பழமொழியின் அர்த்தங்கள்
அருமையாக சொல்லிட்டார்!
உண்மை அர்த்தம் புரியவைத்த
மாமாவுக்கு நன்றிகள்!
-சி.விநாயகமூர்த்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேல்விஷாரம் வால்மீகிஸ்வரா் கோயில் பிரதோஷ வழிபாடு

1.5.1976: மொழித் திணிப்புக்கு பிரதமர் இந்திரா காந்தி எதிர்ப்பு!

மனைவி பிரிந்து சென்றதால் இளைஞா் தற்கொலை

நாச்சியாா்கோவில் திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

