திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரங்கம்

வருணின் வீடு / வருணின் அறை,  நேரம் : வெவ்வேறு நேரங்கள், மாந்தர் : வருண்

News image
Updated On :30 ஆகஸ்ட் 2019, 6:30 pm

க.சங்கர்


காட்சி : 1

இடம் : வருணின் வீடு / வருணின் அறை,  நேரம் : வெவ்வேறு நேரங்கள், மாந்தர் : வருண்
காலை 5.30 : வருண் ஓவியம் வரையத் தொடங்குகிறான்.  
காலை 7.15 : வருண் ஓவியத்தைச் சரிபார்க்கிறான்.  
காலை 7.30 : வருண் ஓவியப் படத்தை அஞ்சலுறையில் போடுகிறான். முகவரி எழுதுகிறான்.

காட்சி : 2

இடம் : வருணின் வீடு ,   நேரம் : இரவு 8.30 ,   மாந்தர் : வருண்,  அப்பா
(வருண்  அமைதியாக வந்து நிற்கிறான்) 

அப்பா :  பால் குடிச்சுட்டியா? 
வருண் : ம்ம்ம்.. குடிச்சுட்டேன்-ப்பா..                                                                                             அப்பா அவனை நன்றாகப் பார்க்கிறார். 
அப்பா : அந்த கவரை போஸ்ட் பண்ணியாச்சு, வருண். ஸ்டேட் பேங்க்ல இருக்கிற பாக்ஸ்ல போட்டுட்டுதான் ஆஃபீஸூக்கே போனேன் .. 
வருண் :  (புன்னகையுடன்) தேங்க்ஸ்-ப்பா.. அந்தப் படத்தை நான் அச்சு அசலா மாஸ்ட்டர் வரையிற மாதிரியே வரஞ்சிருக்கேன் .. அவர் பார்த்தா சந்தோஷப்படுவார்.. 
அப்பா : ம்ம்ம்.. அவர் பேர் என்ன?  டக்குனு ஞாபகம் வரமாட்டேங்குது..
வருண் : ஓவியர் இனியவன்.. எல்லாரும் அவரை இனியன் மாஸ்ட்டர்னு சொல்லுவாங்க... 
அப்பா : ஸ்ஸ்ஸ்.. இனியவன்.  அவருக்கு நீ நிறைய ஓவியங்கள் வரைஞ்சு அனுப்பிருக்கியே உனக்கு எதாவது பதில் போட்டிருக்காரா..?  எனக்கு தெரியலை.. 
வருண் : பதில் எல்லாம் வேண்டாம்-ப்பா..  அவர்  என்னோட படங்கள பாத்தாலே  போதும்..  
அப்பா அவனை நன்றாகப் பார்க்கிறார்.


காட்சி : 3

இடம் : இனியவனின் அலுவலகம் ,   நேரம் : மாலை 5 மணி,  மாந்தர் : இனியவன்,  தியாகராஜன். 
(இனியவன் வருணின் ஓவியத்தைக் கையில் வைத்திருக்கிறார்.)  

தியாகராஜன்  : ( உள்ளே வந்து)  சார்,  கூப்டீங்கனு சொன்னாங்க..  
இனியவன் : ஆமாம்,  தியாகு..  வருண்-னு ஒரு பையன் அப்பப்போ படம் வரஞ்சு அனுப்பிட்டிருக்கானே..  அவன கான்ட்டேக்ட் பண்ணி பேசிப் பாருங்க.. முடிஞ்சா அடுத்த வாரம் அவங்க வீட்டுக்குப் போய் பையனைப் பார்த்துட்டு வர்லாம்..
(இனியவன் படத்தைக் கொடுக்கிறார்)
தியாகராஜன் :  (படத்தை வாங்கி) அடுத்த வாரமா.. ?  ஆனா, சார்..  அந்த வாரம் முழுக்க ஒரு எக்ஸிபிஷன் இருக்கே..  
இனியவன் : சரிதான்..  அந்த ஏரியாவ தாண்டித்தானே போகணும்.. ஒருநாள் முன்னாடியே அங்க போகலாம்..  இந்த வருண் ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருக்கான்னு நினைக்கிறேன்..  சந்திச்சுத்தான் பார்ப்போமே..   
தியாகராஜன் : ஓ.கே. சார்..  நான் கேட்டுட்டு சொல்றேன்.
(தியாகராஜன் படத்தில் இருக்கும் தொடர்பு எண்ணுக்கு அழைப்பு விடுக்கிறார்)
 
 
காட்சி : 4

இடம் : வருணின் வீடு,   நேரம் : இரவு 9.10,  மாந்தர் : வருண்,  அப்பா,  அம்மா 
வருண் : ப்பா..  உண்மையாவேவா..  இல்ல எதாவது காமெடி கீமெடி பண்றீங்களா.. ? 
அப்பா : ம்ம்ம்.. நீ இப்படி சொல்லுவேன்னு தெரியும்..  இந்தா.. ஆட்டோமேட்டிக் கால் ரெக்கார்டர் லிஸ்ட்ல மதியம் ரெண்டு மணி ஃபைல கேளு..  
அப்பா நீட்டும் திறன்பேசியை வாங்கிக் கேட்கிறான் வருண். 
வருண் : ( மகிழ்ச்சியில்)  ஊஊஊஊஊ.. ஏஏஏஏஏஏஏ.. 
வருண் துள்ளிக் குதிக்கிறான். 
அம்மா : டேய்..  டேய்..  டேய்..  அப்பா ஃபோனை எங்காவது கீழ போட்டுத் தொலச்சிடாத..  அத எங்கிட்ட கொடு.. 
வருண் :  ம்மா.. மாஸ்ட்டர் நம்ம வீட்டுக்கு வர்றாரு..இதென்ன பெரிய   ஃபோனு .. போனா போயிட்டுப் போகுது.. 
அப்பா : போயிட்டுப் போகுதா?  வேணா..  வலிக்குது..  
அம்மாவும் வருணும் சிரிக்கிறார்கள்.

காட்சி : 5

இடம் : வருணின் வீடு,   நேரம் : மதியம் 1.30,   மாந்தர் : இனியவன்,  அப்பா, அம்மா.
(இனியவன்  கைக்குட்டையால் கையைத் துடைத்தபடி சோஃபாவில் வந்து அமர்கிறார்)  
அப்பா :  இந்தாங்க லைம் ஜுஸ்..  சாப்பாடெல்லாம் பிடிச்சிருந்ததா,  சார்? 
இனியவன் :  ம்ம்ம்..  உண்மையாவே பிரமாதமா இருந்துச்சு..  இவ்ளவு பண்ணி வெப்பீங்கனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல .. அசத்திட்டீங்க..  
அப்பா : சார், உங்கள நல்லபடியா கவனிக்கறது ஒரு
வகையில எங்க கடமை .. எங்க பையனுக்கு உங்கள ரொம்பப் புடிக்கும்..  உங்க ஓவியங்களைப் பத்தியும் உங்கள பத்தியும் அவன் பேசாத நாளே இல்ல..  
அம்மா : சிறுவர் இதழ்கள் தவிர எப்பவாது பேப்பர்ல நடுபக்க கார்ட்டூன் வரஞ்சீங்கனாலும் கண்டுபிடிச்சிருவான்..  அதே மாதிரியே வரைஞ்சும் காட்டுவான்.. இனியவன் :  கேட்கவே சந்தோஷமா இருங்குங்க..  அவனுக்கு ஏன் என் படங்களைப் பிடிச்சிருக்கு..? 
அப்பா : தெரியலை , சார்..  நாங்க கேட்டா அதெல்லாம் அப்டித்தான்னு சொல்றான்.. 
அம்மா : உங்ககிட்ட காட்டணும்னு என்னவோ தேடிட்டிருக்கான் .. வந்ததும் நீங்களே பேசிப்பாருங்க..

காட்சி : 6

இடம் : வருணின் வீடு ,   நேரம் : பிற்பகல்  2.15 ,   
மாந்தர் : வருண்,  இனியவன்.
(வருண் ஒரு நோட்டின் பக்கத்தைத் திருப்புகிறான்)
வருண் :  மாஸ்டர்,  இதுதான் நான் ஆரம்பத்துல வரைஞ்ச படங்கள்.. சுமாராத்தான் இருக்கு..  ஆனா,  என்னோட ஃபேவரிட்ல இதுவும் சேரும்.. 
(இனியவன்  அமைதியாகப் பார்க்கிறார்)
                                                                                    
வருண் :  இது நீங்க " டம்பான் ' னு ஒரு கதைக்கு வரைஞ்ச பாண்டா கரடி.. மூக்குலதான் கொஞ்சம் சொதப்பிட்டேன்..  போண்டா கரடி மாதிரி ஆயிருச்சு..   
(இனியவன்  அமைதியாகப் பார்க்கிறார்)
                                                                                   
வருண் :  இது " நெருங்கிய நண்பர்கள் '.  இதுலயிருந்துதான் நான் உங்களை மாதிரியே வரையத் தொடங்கினேன்..  எனக்கு ரொம்ப புடிச்ச படம் இதுதான்.. 
(இனியவன்  அமைதியாகப் பார்க்கிறார்)
                                                                                         
வருண் :  இது " பார்வை '...  இது " மூன்று கூழாங்கற்கள்  '.. . இது.. இது.. அய்யய்யோ..  ஞாபகம் வர்லியே..

வருண் பேசிக்கொண்டே பக்கங்களைத் திருப்பிச் செல்கிறான்.                                            
(இனியவன்  அமைதியாகப் பார்க்கிறார்) 
 
 
காட்சி : 7

இடம் : வருணின் வீடு,   நேரம் : மாலை 5.50,   மாந்தர் : வருண்,  இனியவன்,  அப்பா,  அம்மா.

(வருணின் முகம் வாடியிருக்கிறது)
 
வருண் : மாஸ்டர்,  அதுக்குள்ள டைம் ஆயிடுச்சா.. என்னால நம்பவே முடியல.. 
இனியவன் :  வருண்..  உனக்கு நல்ல திறமை இருக்கு..  ரொம்ப நல்லா அப்சர்வ் பண்ற..  தொடர்ந்து நீ நிறைய வரையணும்..  ஆனா,  அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் ... நீ தப்பா எடுத்துக்கலனா,  சொல்றேன்.. 
வருண் :  சொல்லுங்க,  மாஸ்டர்..  கண்டிப்பா நீங்க 
நல்லதுக்குத்தான் சொல்வீங்க.. 
இனியவன்  : ம்ம்ம்.. நீ எங்கிட்ட காட்டின படங்கள்ல ஆரம்பத்துல வரஞ்சுதுனு சொன்னேயில்ல..  அந்த ஸ்டையில்லியே இனிமே நீ நிறையா வரை.. 
வருண் :  ( அதிர்ந்து)  மாஸ்டர்..  என்ன சொல்றீங்க.. ?
நான் உங்கள மாதிரியேதான வரையறேன்..  அப்றம் ஏன்? 
இனியவன் : அதுதான் பிரச்னை,  வருண்..  ஒரு ஓவியர் அவரோட தனிப்பட்ட ஸ்டைலாலதான் அடையாளம் தெரியறார்..  என்னை மாதிரி வரையத்தான் நான் இருக்கேனே..  அது போதும்.. 
(வருண்  அமைதியாக இருக்கிறான்) 
இனியவன்  :  உன்னோட பார்வையில நீ வரஞ்ச அந்த மொதல் படங்கள் எல்லாம் புதுசா இருக்கு..  இதுவரைக்கும் அப்படியொரு ஸ்டைல் யாருக்கும் இல்ல..  அதான் சொல்றேன்.. 
(வருண் இனியவனை நன்றாகப் பார்க்கிறான்)
இனியவன் : நமக்கு யார் வேணாலும் ரோல் மாடலா இருக்கலாம்..  ஆனா,  நாம யாருக்காவது ரோல் மாடலா இருக்கணும்னா நமக்கு ஒரு தனித்தன்மை வேணும்..  புரியுதா, வருண்?
வருண் : புரியுது,  மாஸ்டர்..  இனிமே நான் உங்களுக்கு அனுப்புற ஓவியங்கள் எப்படி இருக்கும்னு பாருங்க..

(இனியவன் வருணின் கையைக் குலுக்குகிறார்)

- திரை-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.