நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இயேசுவின் வழி நடப்போம்!

கருணை என்பது அவர் முகம்!கண்களில் தீப ஒளிச் சுடர்!பொறுமை என்பது அவர் வழி!

News image
Updated On :21 டிசம்பர் 2019, 3:50 pm

புலேந்திரன்

கருணை என்பது அவர் முகம்!
கண்களில் தீப ஒளிச் சுடர்!
பொறுமை என்பது அவர் வழி!
பொல்லாதவர்க்கும் நல்லவர்!

மக்களுக்கானப் பணி செய்தார்!
மாளாக் கொடுமை அனுபவித்தார்!
மக்களை நல்வழிப் படுத்திடவே
மலைப்பிரசங்கம் பல செய்தார்!

சாட்டையினாலே அடித்தனரே!
சாகும் வரையில் சிலுவையிலே
ஏற்றியே அவரை வதைத்தனரே!
ஏற்றே சிரித்தார் இயேசுவுமே!

""பாவச் செயலை நீக்கிடுங்கள்....
பாவிகள் திருந்திட மன்னியுங்கள்!.....
பாவம் போக்குவார் கர்த்தர்...'' என 
பரிவுடன் கூறி உயிர் நீத்தார்!

அன்பு கருணை காட்டிடுவோம்!
ஆறுதல் சொல்லித் தேற்றிடுவோம்!
என்றும் அமைதி காத்திடுவோம்!
இயேசு காட்டிய வழி நடப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.