

மதீனா பள்ளி வாசலிலே
முழந்தாளிட்டு ஓர் அன்பர்
காலை மாலை எப்போதும்
கடவுளை நன்கு தொழுது வந்தார்!
அண்ணல் நபிகள் தினந்தோறும்
அந்தக் காட்சியைப் பார்த்து வந்தார்!
""என்றும் இங்கே நாம் காணும்
இவர் யார்?'' தோழரை அவர் கேட்டார்!
""நல்லார் பக்திமான் இவரே
நாளும் இறையைத் தொழுகின்றார்!''
என்றே தோழர் பதில் சொன்னார்!
இன்முகத்தோடு நபி கேட்டார்....
....""அப்படியாயின் இவர் வாழ்க்கை
எப்படிச் செல்லும் சொல்லுங்கள்!''
""இவர் தம் சகோதரர் விறகு வெட்டி
இவர்க்கும் உணவு தருகின்றார்!''
தோழர் உரையைக் கேட்ட நபி,
தோன்றிய கருத்தை உடன் சொன்னார்!
""உழைக்கும் தோழர், இவரைவிட
உண்மையில் பலமுறை மேலாவார்!....
.... இல்லம் காக்க உழைப்பதுவும்
இறையைத் தொழுதல் போலாகும்!....
.... இவருக்கு இதனைச் சொல்லுங்கள்!.....
எங்கும் இன்ப ஒளி பரவும்!''
நல்லுரை கேட்ட அம்மனிதர்
நாளும் உழைத்து நலம் பெற்றார்!
இல்லத்தில் துன்பம் நீங்கியது!
இறைவன் அருளும் ஓங்கியது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
துரந்தர் - 2 தமிழில் நாளை வெளியாகிறது!

1 - 9 வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை! ஏப்.17 முதல் கோடை விடுமுறை!
பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்!

உணவில் தினமும் எவ்வளவு உப்பு சேர்க்கலாம்?
வீடியோக்கள்

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

