புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இனிய சொல்லால் வாழ்க!

ஒரு செடியில் முள்ளும் மலரும்;முள்ளை எவரே விரும்புவர்?அருமை மணமும் அழகும் நிறைந்த 

News image
Updated On :11 ஏப்ரல் 2020, 1:15 pm

அழகு இராமானுஜன்

ஒரு செடியில் முள்ளும் மலரும்;
முள்ளை எவரே விரும்புவர்?
அருமை மணமும் அழகும் நிறைந்த 
மலரைத் தானே விரும்புவர்!

ஒரு முகிலில் இடியும் மழையும்;
இடியை எவரே விரும்புவர்?
பெருமைக் குரிய மழையைத் தானே 
உயிராய் மதித்து விரும்புவர்!

ஒரு மொழியில் ஏச்சும் பேச்சும்;
ஏச்சை எவரே விரும்புவர்?
கரும்பின் சாறாய் சுவைக்கும் இனிய
பேச்சைத் தானே விரும்புவர்!

ஒன்று சொல்வேன் நன்று கேள் - நீ 
உலகோர் விரும்பும் ஒருவனாய்
என்றும் மலர்போல், மழைபோல் சான்றோர்
இனிய சொல் போல் வாழ்க நீ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.