27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தோட்டம்!

அம்மா நட்ட முல்லைக்கு அப்பா அமைத்த பந்தலிலேஆகாயத்தின் மீன்கள் போல் 

News image
Updated On :1 ஆகஸ்ட் 2020, 6:00 am IST


அம்மா நட்ட முல்லைக்கு 
அப்பா அமைத்த பந்தலிலே
ஆகாயத்தின் மீன்கள் போல் 
ஆயிரம் பூக்கள் சிரித்திருக்கும்!

தாத்தா நட்ட தக்காளி 
தகதக என்றே பழங்கள் தரும்!
பாட்டி நட்ட பப்பாளி 
பழுத்துத் தொங்கும் குலைகுலையாய்!

மாமா நட்ட தேமாவோ 
மல்கோவாப் பழங்கள் தரும்!
அத்தை நட்ட அத்திமரம் 
அழகாய்ச் சிவந்த பழங்கள் தரும்!

சித்தி நட்ட செவ்வாழை 
சீப்புச் சீப்பாய் பழங்கள் தரும்!
அண்ணன் வைத்த அன்னாசி 
அரண்போல் வேலியில் மடல் விரிக்கும்!

அக்காள் நட்ட மல்லிகைதான் 
அந்தியில் மலர்ந்து மணம் வீசும்!
பிஞ்சுக் கரத்தால் நான் வைத்த 
பிச்சிப் பூவும் உடன் மணக்கும்!

காலையில் தண்ணீர் பாய்ச்சிடுவோம்!
களைகள்போக்கிக் காத்திடுவோம்!
சோலை போலத் தோன்றிடுதே!
சொந்தங்கள் வைத்த தோட்டமிது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.