நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வியாசரின் பொன்மொழிகள்!

சாத்விகமான ஒரு மனிதன் உலகில் இருக்கும்வரை மழை பெய்துகொண்டிருக்கும்.

News image
Updated On :31 அக்டோபர் 2020, 12:30 am

அ . ப . ஜெயபால்


சாத்விகமான ஒரு மனிதன் உலகில் இருக்கும்வரை மழை பெய்துகொண்டிருக்கும்.

எண்ணம், சொல், செயல் அனைத்திலும் மனிதன் அடக்கத்தைக் கடைப்பிடிக்கப் பழக வேண்டும்.

இறைவனுக்குப் படைத்த பின்னரே தினமும் உணவை உண்ண வேண்டும்.

அறத்துடன் கூடிய வழியில் செல்வத்தைச் சேர்க்க வேண்டும். பின்பு அதனைக் கொண்டு கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

இறைவனை நினைப்போர்க்கு குறைவு ஏதும் ஏற்படாது.

அறம் என்னும் தோணியில் வாழ்க்கைக் கடலை எளிதாகக் கடக்கலாம்.

ஆசையற்றவனுக்கு அறிவு சிறப்பாக இருக்கும்

அறத்தில் நம்பிக்கை அற்றவனுக்கு வாழ்வில் பிடிப்பு இருக்காது.

சத்தியம் அடக்கத்தைக் கொடுக்கும். அடக்கத்தினால் பேரின்பத்தை அடையலாம்.

கடவுளைச் சரணடைவதே கல்வியின் பயன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.