"உலகநாதர்' ..., "பரமாயி'...., தம் மகனாய் - வ.உ.சி.
"ஓட்டப்பிடாரம்' எனும் ஊரில் பிறந்தார்
பல கற்றார் ; வழக்கறிஞர் பணியால் - ஊரில்
பாமரர்க்கும் உதவி பல புரிந்தார்.
ஆங்கிலேயர் விற்க வந்த பொருளை - இங்கே
அவர் துணிவாய்ப் புறக்கணிப்பு செய்தார்.
வங்கத்தில் "சுதேசிக் கப்பல்' ஓட்டி - நல்ல
வணிகத்தால் பெரும் புரட்சி கண்டார்.
மக்களெல்லாம் வருத்தமுற அவரை - கோவை
மத்தியச் சிறைச் சாலையிலே அடைக்க....,
செக்கிழுத்தார் ; கல்லுடைத்தார் அங்கே - தியாகச்
செம்மலெனப் புகழ்பெற்றார் அதனால்.
சிறைக்குள்ளே துன்புற்ற போதும் - சிறந்த
சிந்தனையால் எழுதினார் பல நூல்கள்! - அவை
தமிழ்மறை திருக்குறளுக்குரையும் - நம்
மன இருளைப் போக்கும் நூல் பலவும்!
திருநாட்டில் சுதந்திரமாய் நாமும் - வாழத்
தியாகங்கள் செய்தவர்கள் பலருள்
சிறந்தவராம் சிதம்பரனார்! அவர்தம்
சேவையினைப் போற்றிடுவோம் வாரீர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெய்வேலி: அதிமுக வெற்றி

சிதம்பரம் பேருந்து நிலைய கடையில் திருட்டு: இளைஞா் கைது

பண்ருட்டி அருகே மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்

திமுக தோல்வி: கட்சி நிா்வாகி மாரடைப்பால் மரணம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


