தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கப்பலோட்டிய தமிழன்

"உலகநாதர்' ..., "பரமாயி'...., தம் மகனாய் - வ.உ.சி."ஓட்டப்பிடாரம்' எனும் ஊரில் பிறந்தார்பல கற்றார் ; வழக்கறிஞர் பணியால் - ஊரில் 

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 12:30 am

அ.கருப்பையா

"உலகநாதர்' ..., "பரமாயி'...., தம் மகனாய் - வ.உ.சி.
"ஓட்டப்பிடாரம்' எனும் ஊரில் பிறந்தார்
பல கற்றார் ; வழக்கறிஞர் பணியால் - ஊரில் 
பாமரர்க்கும் உதவி பல புரிந்தார்.

ஆங்கிலேயர் விற்க வந்த பொருளை - இங்கே 
அவர் துணிவாய்ப் புறக்கணிப்பு செய்தார்.
வங்கத்தில் "சுதேசிக் கப்பல்' ஓட்டி - நல்ல 
வணிகத்தால் பெரும் புரட்சி கண்டார்.

மக்களெல்லாம் வருத்தமுற அவரை - கோவை
மத்தியச் சிறைச் சாலையிலே அடைக்க....,
செக்கிழுத்தார் ; கல்லுடைத்தார் அங்கே - தியாகச் 
செம்மலெனப் புகழ்பெற்றார் அதனால்.

சிறைக்குள்ளே துன்புற்ற போதும் - சிறந்த 
சிந்தனையால் எழுதினார் பல நூல்கள்! - அவை 
தமிழ்மறை திருக்குறளுக்குரையும் - நம் 
மன இருளைப் போக்கும் நூல் பலவும்! 

திருநாட்டில் சுதந்திரமாய் நாமும் - வாழத் 
தியாகங்கள் செய்தவர்கள் பலருள் 
சிறந்தவராம் சிதம்பரனார்! அவர்தம் 
சேவையினைப் போற்றிடுவோம் வாரீர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.