கப்பலோட்டிய தமிழன்
"உலகநாதர்' ..., "பரமாயி'...., தம் மகனாய் - வ.உ.சி."ஓட்டப்பிடாரம்' எனும் ஊரில் பிறந்தார்பல கற்றார் ; வழக்கறிஞர் பணியால் - ஊரில்


"உலகநாதர்' ..., "பரமாயி'...., தம் மகனாய் - வ.உ.சி.
"ஓட்டப்பிடாரம்' எனும் ஊரில் பிறந்தார்
பல கற்றார் ; வழக்கறிஞர் பணியால் - ஊரில்
பாமரர்க்கும் உதவி பல புரிந்தார்.
ஆங்கிலேயர் விற்க வந்த பொருளை - இங்கே
அவர் துணிவாய்ப் புறக்கணிப்பு செய்தார்.
வங்கத்தில் "சுதேசிக் கப்பல்' ஓட்டி - நல்ல
வணிகத்தால் பெரும் புரட்சி கண்டார்.
மக்களெல்லாம் வருத்தமுற அவரை - கோவை
மத்தியச் சிறைச் சாலையிலே அடைக்க....,
செக்கிழுத்தார் ; கல்லுடைத்தார் அங்கே - தியாகச்
செம்மலெனப் புகழ்பெற்றார் அதனால்.
சிறைக்குள்ளே துன்புற்ற போதும் - சிறந்த
சிந்தனையால் எழுதினார் பல நூல்கள்! - அவை
தமிழ்மறை திருக்குறளுக்குரையும் - நம்
மன இருளைப் போக்கும் நூல் பலவும்!
திருநாட்டில் சுதந்திரமாய் நாமும் - வாழத்
தியாகங்கள் செய்தவர்கள் பலருள்
சிறந்தவராம் சிதம்பரனார்! அவர்தம்
சேவையினைப் போற்றிடுவோம் வாரீர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...