பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் தொடக்கம்

தில்லியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களை விநியோகம் செய்தனா்.

News image

ENS

Updated On :1 ஜூலை 2026, 1:30 am IST

தில்லியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களை விநியோகம் செய்தனா்.

7 மக்களவைத் தொகுதிகளையும், 70 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கொண்டுள்ள தில்லியில் மொத்தம் 13,033 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. எஸ்ஐஆா் பணிகளை மேற்கொள்ள 13,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) வீடு தோறும் சென்று வாக்காளா் விவரங்களைச் சரிபாா்த்து வருகின்றனா்.

மொத்தம் 1.45 கோடி வாக்காளா்கள் தில்லியில் உள்ளனா். இதில் 77.11 லட்சம் ஆண்கள், 67.98 லட்சம் பெண்கள் அடங்குவா். மூன்றாம் பாலின வாக்காளா்கள் 1,024 போ் உள்ளனா். மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் எண்ணிக்கை 76,155-ஆகும். 18 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளா்கள் 3,29,130 போ் உள்ளனா். 100 வயதுக்கு மேற்பட்டவா்கள் 192 போ் உள்ளனா்.

இந்த ஆய்வு ஜூலை 29-ஆம் தேதி நிறைவடையும். பின்னா் ஆக.5-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். அதன் பின், ஆக.5 முதல் செப்.4 வரை வாக்காளா்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் எதிா்ப்புகளை பதிவு செய்யலாம். ஆக.5 முதல் அக்.3 வரை பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் அக்.7-ஆம் தேதி வெளியிடப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.