தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நம்பிக்கை!

இங்கிலாந்து நாட்டில் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் ஜான் என்று விவசாயி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு குதிரை இருந்தது.  பீட்டர்சன் என்பவர் அவரைப் பார்க்க வெகு அவசரமாக வந்தார். 

News image
Updated On :12 செப்டம்பர் 2020, 12:30 am

பொ.பாலாஜிகணேஷ்


இங்கிலாந்து நாட்டில் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் ஜான் என்று விவசாயி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு குதிரை இருந்தது. பீட்டர்சன் என்பவர் அவரைப் பார்க்க வெகு அவசரமாக வந்தார்.

""என்ன விஷயம்?'' என்று கேட்டார் ஜான்.

""என் பெயர் பீட்டர்சன்....நான் லண்டனிலிருந்து வருகிறேன்..... நீங்க எனக்கு ஓர் உதவி செய்யணும்...''

""சொல்லுங்க....''

""இது எனக்குப் பழக்கமில்லாத பாதை. நான் வந்த கார் கண்ட்ரோல் இல்லாமல் ஓர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. காரை வெளியே எடுக்கணும்.... உங்க கிட்டே ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க.... அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம்னு சொன்னாங்க.... அதான் உங்ககிட்டே உதவி கேட்கலாம்னு.....''
""ரொம்பப் பெரிய காரா?''

""இல்லை.... சின்னக் கார்தான்...''

ஜான் கயிறு உட்பட சில உபகரணங்களை எடுத்துக்கொண்டார். குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்தியபடி பீட்டர்சனுடன் நடந்து சென்றார்.

இருவரும் கார் பள்ளத்திற்கு அருகே சென்றனர். காரை வெளியே எடுக்கும் முயற்சியில் குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என்று ஜானுக்குத் தோன்றியது. ஜான் ஒரு கயிற்றைக் காரில் கட்டி குதிரையோடு பிணைத்தார்.

பிறகு, ""எங்கடா, "கேஸி!'.... இழு பார்ப்போம்!'' என்று சத்தமாகக் குரல் கொடுத்தார். குதிரை அசையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது.

""பெய்லி!..... இழுடா ராஜா!'' என்று மறுபடியும் உரத்த குரலில் சொன்னார் ஜான்.
குதிரை ஓர் அங்குலம் கூட நகரவில்லை. பீட்டர்சனுக்குக் கவலையாகிவிட்டது!
ஜான் குதிரையைப் பார்த்து, ""என் செல்லம்,... பட்டீ!..... நீயும் சேர்ந்து இழுடா!'' என்றார்.

அவ்வளவுதான்!.... குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது! அடுத்த ஐந்தாவது நிமிடம் கார் பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது!

பீட்டர்சன், விவசாயி ஜானுக்கு நன்றி கூறினார். பிறகு ஜானிடம், ""ஐயா,.... நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பெயரில் கூப்பிட்டீங்க?....அதுதான் எனக்குப் புரியவில்லை....''

""அதுவா?.... என் செல்லக் குதிரை பட்டீக்குக் கண் தெரியாது!.... அதான் அது கூட இன்னும் மூணு குதிரைகள் இருக்கிற மாதிரி நம்ப வெச்சேன்.... அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு!.... காரை வெளியே இழுத்துடுச்சு!...''

பீட்டர்சன் சிரித்துக்கொண்டே அவருக்கு மறுபடியும் நன்றி கூறிவிட்டுக் கிளம்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.